2025 மே 01, வியாழக்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியி; ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தர்மரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கடந்த நான்கு வருடங்களாக கராத்தே பயிற்சியினைப்பெற்று கறுத்தப்பட்டி பெற்றவர்களுக்கு இதன்போது அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, மாணவர்களின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றன.

அத்துடன் கராத்தே கலையினை கற்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதி சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .