2025 மே 01, வியாழக்கிழமை

ஐம்பது சமுர்த்திப் பயனாளிகள் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய காத்தான்குடி தெற்கு கிராமத்திலுள்ள 50 சமுர்த்திப் பயனாளிகள் குடும்பங்களுக்கு  'திவிநெகும' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நேற்று சனிக்கிழமை  வழங்கப்பட்டன.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

'திவிநெகும' திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதையொட்டி இந்த மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பாத்தும்மா பரீட், சமுர்த்தி வலய முகாமையாளர் ஏ.எல்.சுல்மி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .