2025 மே 01, வியாழக்கிழமை

கதிரவெளி காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

மட்டக்களப்பு, கதிரவெளி பிரதேசத்தின் காட்டுப் பகுதியில்; சிறுவன்; ஒருவரின் சடலத்தினை ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

புதூர், கதிரவெளியைச் சேர்ந்த சதாசிவம் நிரேஜன் (வயது 18) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்;கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் சடலமொன்று கிடப்பதாக பிரதேச வாசிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய மேற்படி சடலத்தை தாங்கள் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .