2025 மே 01, வியாழக்கிழமை

கோவிலில் கொள்ளையிட்டவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் கோவிலிலுள்ள உண்டியலை  உடைத்து கொள்ளையிட்டதாகக் கூறப்படும் தாண்டவன்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மடக்கிப்பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த லொக்குகே தெரிவித்தார்.

தப்பிச்செல்ல முயன்ற இவரை இந்தக் கோவிலில் புனர்நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சிலர் மடக்கிப்பிடித்ததுடன், இவரிமிருந்து பணத்தையும் கூரிய ஆயுதங்களையும் மீட்டு பொலிஸில் ஒப்படைத்ததாகவும்  மேற்படி கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

கோவிலின் கதவை உடைத்துக்கொண்டு உட்சென்ற இவர், விக்கிரகங்களை கிளப்பிப் பார்த்ததாகவும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

மேற்படி நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .