2025 மே 02, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் மோட்டார்சைக்கிளை செலுத்தியவர் உட்பட கஞ்சா போதைப் பொருளுடன் மூவர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருள் மற்றும் மதுபோதையில் மோட்டார்சைக்கிளை செலுத்தியதுடன் பொலிசாருடன் அநாகரிகமாக நடந்த கொண்ட ஒருவர் உட்பட மூவரை இன்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று சனிக்கிழமை இரவு 7.20 மணியளவில் அக்கரைப்பற்று முதலாம் பிரிவு ஹிரா வீதீயில் வைத்து அதே வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய மற்றும் அக்கரைப்பற்று 16 ஆம் பிரிவு வடிச்சல் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இருவரை கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை கோளாவில் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் வீதி வாகன சோதனையில் இரவு 7.00 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  மதுபோதையில் மோட்டார்சைக்கிளை செலுத்திவந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டபோது பொலிசாருக்கு சாரத்தை உயர்த்தி அநாகரிகமாக நடந்த கலாச்சார மண்டப வீதியைச் சேர்ந்த 49 வயதுடையவரை கைது செய்யப்படடனர்.

இச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X