2025 மே 01, வியாழக்கிழமை

மாடு குத்தி பெண் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிலியடிச்சேனை கிராமத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தாயான ஜெயநாயகி முத்துவேல் என்பவர்  மாடு குத்தியதால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக அவர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  சந்திவெளி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயலில் நின்றுகொண்டிருந்த இப்பெண்ணை மாடொன்று குத்தி காயப்படுத்திய நிலையில்,   அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதித்ததாக  படையினர் தெரிவித்தனர்.

இவர்  தற்சமயம் தேறி வருவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .