2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

திருட்டு:சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் மடி கணினி மற்றும் கையடிக்கத் தொலைபேசி ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்கரள சனிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதி மன்றத்தில் சனிக்கிழமை (21) ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம்  மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .