2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக இன்று காலை 07 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வாழைச்சேனையில் இருந்து பொலநறுவைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளும் சிறிய ரக டிப்பர் வாகனம் ஒன்றும் ஓட்டமாவடி பிரதான வீதியில்  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற வாழைச்சேனை ஹைராத் பாடசாலை வீதியைச் சேர்ந்த அசனார் ஹிதாயத்துல்லாஹ் (வயது 38) மற்றும் அதேவீதியைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது அப்துல் காதர் (வயது 47) ஆகியோரே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக சிறிய ரக டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X