2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மின் விசிறிகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை மின் விசிறிகள் வெள்ளிக்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வைபவத்தின் போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ். தட்சணாமூர்த்தி;, வைத்தியசாலை நிருவாக உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பாரூக், வைத்தியசாலையின் அதிகாரிகளும் அல்-கிம்மா சமுக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி ) நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அல்-கிம்மாவின் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

எமது பணி இனம், மதம் என்பவற்றைக் கடந்து மனித குலத்தின் நன்மைக்கான பணிகளை முன்னெடுப்பதில் எப்பொழுதும் உங்களைப் போன்றவர்களுடன் ஒத்துழைக்க சித்தமாக இருக்கிறோம். நீங்களும் எங்களுக்கு ஆலோசனைகளையும் ஆரோக்கியமான திட்டங்களையும் வழங்கும்போது அவற்றை நிறைவேற்றித்தருவதில் முன்னுரிமை காட்டுவோம் என தெரிவித்தார்.

ஏழை எளிய மக்களுக்கான இத்தகைய அரச மருத்துவமனைகளின் குறைபாடுகளை இவ்வாறான சமுக சேவைகள் அமைப்பு நிறைவேற்றும்போது அதற்கான சமூக அங்கீகாரமும், சமூக நல்லிணக்கமும் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களையும், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் ஏனைய உறுப்பினர்களையும் மன நிறைவோடு எனது சார்பிலும் வைத்தியசாலையின் ஊழியர்களது சார்பிலும் பாரட்டுகிறோம் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ.; தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X