2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கால்நடை வளர்ப்பு பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்புத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று(21) வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி முகாமைத்துப் பணிப்பாளர் டி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வவுணதீவு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி கே.சண்முகலிங்கம் மற்றும் வாழ்வின் எழுச்சி திட்டமுகாமையாளர் திருமதி எஸ்.தமயந்தி, திட்ட உதவியாளர் எஸ்.சதீஸ்குமார் உட்பட திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கோழி வளர்ப்பு திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு கோழி வளர்ப்பு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X