2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீருக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக மரணித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

திருமால் பவித்திரன் என்ற குழந்தையே, தனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரர் தனது ஒரு மாத வயதையுடைய மற்றக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்காக குளியலறையை விட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் தாயைத் தேடி இக்குழந்தை குளியலறைக்கு வந்த நிiயிலே தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்துள்ளது. இக்குழந்தை நீர் நிரம்பிய வாளிக்குள் தலை கீழாக விழுந்து கிடப்பதை இவரது சகோதரியின் ஐந்து வயதுச் சிறுவன் கண்டு விட்டிலிருந்தவர்களிடம் கூறியுள்ளான்.

அதன் பின்னர் தாய் ஓடிச்சென்று குழந்தையை நீர்வாளியிலிருந்து வெளியே எடுத்த பொழுது குழந்தை மூர்ச்சித்துப் போய் இருந்துள்ளது.
உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் செல்லும் போது வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X