2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மஞ்சந்தொடுவாயில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான  சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நபரை   இன்று செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இவரை எதிர்வரும்  7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

சந்தேக நபரை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்த சிறைச்சாலை அதிகாரிகள்,  பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றனர்.

மேற்படி சிறுமி கடந்த 10.9.2014 அன்று துஷ்பிரயோகதுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X