2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒரு தாய், பிள்ளைகளாக மக்கள் அணிதிரண்டுள்ளனர்: முபீன்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

இன, மத, மொழி வேறுபாடுகளை துறந்து ஒரு தாய், பிள்ளைகளாக  மக்கள் அணிதிரண்டுள்ளனர். இந்த ஒற்றுமையை உறுதிப்படுத்தி உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நிரந்தர அமைதிச்சூழலை உருவாக்கும் முக்கிய பொறுப்பு  நாட்டின் தலைவரான ஜனாதிபதி மற்றும்;  பிரதமரின் கைகளில்; உள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் புதன்கிழமை (14)  அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இனப்பிரச்சினையின் எதிர்பாராத விளைவான உள்நாட்டு யுத்தம்,  ஈற்றில் கோரமுகங்கொண்டு குடிமக்களை வதம் செய்தது. முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடித்;துவைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தின் ரணங்களை சுமந்த மக்களின் மனங்களை மேலும் ரணமாக்கிவிட்டார்.

யுத்தத்தின் பின்னரான ஐந்து ஆண்டுகளில் நல்லிணக்க,  மீளிணக்கச் செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இன முரண்பாடுகளால், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உண்மையை கண்டறியும் செயன்முறை, பொது இடத்தில் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பை பெற்றுக்கொள்ளுதல், காணி பிணக்குகளை தீர்த்தல், இராணுவக் கெடுபிடிகளிலிருந்து மக்களை மீட்டு சிவில் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் செயற்றிட்டம், அதிகார கையளிப்பு உள்ளிட்ட எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

மாறாக, நாட்டில்; வாழும் இனங்கள் திட்டமிட்ட அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவுநிலை ஊக்கப்படுத்தப்பட்டது. பெருந்தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி, அதிகாரத்தை அடையும் கருத்துக்கள் விதைக்கப்பட்டன.

நாட்டுக்கு தேவையான நல்லிணக்கத்தை மறந்து மக்களை பாதித்து நாட்டை குட்டிச்சுவராக்கும் செயற்பாடுகளே அரங்கேறின.
இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எமது நாட்டுப்பற்றை நிரூபித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிறுவியுள்ளனர். இன்று நல்லிணக்கம், மீளிணக்கத்தை அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X