Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 31 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
2014ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 15 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.ஏ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையிலிருந்து 9 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர். காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.ஏ.எம்.பதுர்தீன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 24 மாணவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர். மேலும், இப்பாடசாலையைச் சேர்ந்த எட்டுப் பாடங்களில் எட்டுப் பேர் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், ஏழு பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஏ சித்திகளைப்பெற்ற பாடசாலையாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
39 minute ago