2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் வெள்ளரிப்பழ அறுவடை

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழச்  செய்கை அறுவடை காலம் ஆரம்பமாகியுள்ளது. கிரான்குளம் பிரதேசத்தில் 60 ஏக்கரில் வெள்ளரிச் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின்  பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.

கிரான்குளத்தில் அறுவடை செய்யப்படும்  வெள்ளரிப்பழங்களை அக்கரைப்பற்று முதல் ஓட்டமாவடி வரையிலான பல பிரதேசங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

ஓர் ஏக்கரில் செய்கை பண்ணும் விவசாயி ஒருவர் 5 இலட்சம் ரூபாய் வரை வருமானமாக பெறுவதாகவும் தெரிவித்தார்.  வெள்ளரிப்பழம் ஒன்று ஐம்பது ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வரட்சியான காலத்தில் பொதுமக்கள் வெள்ளரிப்பழங்களை  அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X