2025 மே 19, திங்கட்கிழமை

வைரவர் சிலையை விற்க முயன்றவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கடை ஒன்றில் வைரவர் சிலை ஒன்றை விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

1.5 அடி உயரமும் 13 கிலோ நிறையும் உடைய இந்த வைரவர் சிலையை  இந்தச் சந்தேக நபர் சனிக்கிழமை (04) மாலை  விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்துக் கோவில் ஒன்றிலிருந்து இந்த வைரவர் சிலை திருடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X