2025 மே 19, திங்கட்கிழமை

உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

உடற்கட்டுமானம் மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை பேணுவோரின் நன்மை கருதி, நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் கொண்ட பயிற்சி நிலையம் மட்டக்களப்பி;ல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

கராத்தே போதனாசிரியர்களின் தலைவர் கே. தவப்பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், குறித்த நிலையத்திலுள்ள நவீன பயிற்சி உபகரணங்கள் மூலம் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பி. பிரசாந்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ. லவக்குமார், அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்காக தனியாக பெண் பயிற்சியாளர்களினால் சௌகரியமான நேரத்தில் பாதுகாப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X