2025 மே 19, திங்கட்கிழமை

11 காட்டு யானைகள் கண்ணியம்பை காட்டுப்பகுதிக்கு விரட்டியடிப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள  விவேகானந்தபுரம், 35ஆம் கிராமம், சின்னவத்தை, போன்ற இடங்களில் தங்கியிருந்த 11 காட்டு யானைகள்  சனிக்கிழமை (04) விரட்டப்பட்டு கண்ணியம்பை காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின்  அட்டகாசங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்ணியம்பை காட்டில் விடப்பட்டுள்ள இந்த காட்டு யானைகள் மீண்டும் கிராமங்களினுள் நுழையாமலிருக்க  எல்லைப்புறங்களில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கிராமங்களினுள் யானைகள் மீண்டும் நுழைவதற்கு முற்படும் பட்சத்தில் அவற்றை விரட்டுவதற்கு தமது இரண்டாம் கட்ட நடவடிக்கை தொடரும் எனவும்  அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில்  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், கிராம அலுவலக  உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X