2025 ஜூலை 14, திங்கட்கிழமை

210 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஹைறாத் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து, 210 மில்லிகிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபரொருவரை  மட்டக்களப்பு ஊழல் தடுப்பு மற்றும் போதை தடுப்பு பொலிஸார், திங்கட்கிழமை(27)  கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊழல் தடுப்பு மற்றும் போதை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி ஹைறாத் நகரிலுள்ள வீடொன்றை சோதனை போதே ஹெரோய்னுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை  மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கைப்பற்றப்பட்ட ஹெரோய்னையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .