2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

எருவில் பிரதேசத்தில் உள்ள எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் மற்றும் எருவில் கோடைமேடு நவசக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 65 வறிய மாணவர்களுக்கு இந்த பாதணிகள் வழங்கப்பட்டன.

எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கழகம் இணைந்து இந்த பாதணிகளை மாணவர்களுக்கு வழங்கியது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், களுவாஞ்சிகுடி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் இ.வேணுராஜ் மற்றும் விளையாட்டுக்கழக தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .