2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக இயங்க கூடாது

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக இல்லாமல், இளைஞர்களின் முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் செல்லவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர்கழகங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டம் சனிக்கிமை மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில்; ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் தொனிப் பொருளில் நாடுபூராவும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் இளைஞர்களின் நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படாமல் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன.

இன்று இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொள்ளும் என நம்புகின்றோம்.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒரு செயலிழந்த நிலையிலேயே இருந்துவந்தது. இது தொடர்பில் நாடாளுமன்றில் குரல்கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நிகழ்வுகளுக்கு தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காத நிலையே, கடந்த கால ஆட்சியில் இருந்துவந்தது. இன்று அந்த நிலைமை மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 430 இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .