2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சுவாமி விபுலானந்தரின் 123ஆவது பிறந்த தின நிகழ்வு

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

சுவாமி விபுலானந்தரின் 123ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று (03) மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாட்டில், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்துக்;கு முன்னால் நீருற்றுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் பிறந்த தின வைபவமும் நடைபெற்றது.

இதேவேளை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியிலும் இன்று காலை வைபவமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் எஸ்.எதிர்மனசிங்கம், மாநகர சபை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .