2025 மே 17, சனிக்கிழமை

'ஆரம்பத்திலேயே புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியமாகும். மேலும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதனை கட்டுப்படுத்த முடியும்; என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் எமது பழக்கவழக்கங்கள், புகைத்தல், வெற்றிலை சாப்பிடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த நோய் பரம்பரையாகவும் வரும்.

எனவே, புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதை தடுக்க முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .