2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மக்களின் குறைகளை கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் மக்களை தேடிச்சென்று அவர்களின்; குறைகளை கேட்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி மீனவர் சங்கங்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று  திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு   உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 'மக்கள் அரசியல்வாதிகளை தேடிச்சென்று தேவைகளை கேட்கும் காலம் முடிந்து, அரசியல்வாதிகள் மக்களை தேடிச்சென்று அவர்;களின் தேவைகளை கேட்டறிந்துகொள்ளும் காலம் இன்று உருவாகியுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டுவதுடன், உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளார்' என்றார்.

'கடந்த அரசாங்கத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அரசியல்வாதிகள் அழுத்தங்களை கொடுத்தனர்.

மேலும், சில அரசியல்வாதிகள் கடந்த அரசாங்கத்தில் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .