Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளே மாணவர்கள் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நிலையேற்படுகின்றது என மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் ஏ.பிரியங்கர தெரிவித்தார்.
மாணவர்கள் நற்பிரஜைகளாக வாழும் முறை தொடர்பில் உயர்தர மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு மட்;டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புனித மைக்கேல் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது. இதில் உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று சிறைச்சாலைகளில் அதிகளவிலான மாணவர்கள் கைதிகளாக உள்ளனர். மாணவர்கள் மத்தியில் சிறைச்சாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைமையினை கட்டுப்படுத்தி சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாக குற்றவாளிகளாக அல்லாமல் நல்ல தலைவர்களாக வாழும் முறை தொடர்பில் உயர்தர மாணவர்களை விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 May 2025