2025 மே 16, வெள்ளிக்கிழமை

மின் தாக்கிய ஊழியர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் திருத்த வேலையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மின் தாக்குதலுக்குள்ளாகி   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  மின்சாரசபை ஊழியர் இன்று வெள்ளிக்கிழமை காலை  உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து வந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தாண்டவன்வெளியில் நேற்று வியாழக்கிழமை  திருத்தவேலையில் ஈடுபட்டிருந்த ரம்புக்வெலவை சேர்ந்த கே.டபிள்யூ.வசந்த ஹேரத் (வயது 30) என்பவரே மின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .