2025 மே 16, வெள்ளிக்கிழமை

சுவாமி அறையில் எரிந்த விளக்கினால் பரவிய தீ

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்,  போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட  களுமுந்தன்வெளிக் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மாலை வீடொன்றில் தீ பரவியதால், உடைமைகள் எரிவடைந்துள்ளன.

குறித்த வீட்டில் சுவாமி அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியிருக்கலாமென்று அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதன்போது, சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடைமைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .