2025 மே 15, வியாழக்கிழமை

நகைகளும் பணமும் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில்   நேற்று சனிக்கிழமை இரவு சுமார் 37 பவுண் தங்கநகைகளும் 7 இலட்சம் ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டிலுள்ளோர் நோன்பு கால இரவு வேளை விசேட தொழுகைக்காக வீட்டைப் பூட்டி விட்டு பள்ளிவாசலுக்கு சென்றிருந்தபோதே, வீட்டை உடைத்துக்கொண்டு திருடர்கள் உட்புகுந்துள்ளனர்.

இந்த திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .