2025 ஜூன் 25, புதன்கிழமை

'வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களினால் வீட்டை கட்டிக்கொடுக்க முடியவில்லை'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களினால் ஒரு வீட்டையேனும் இதுவரையில்  கட்டிக்கொடுக்க முடியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்களுக்கு விடிவு வந்துவிட்டால் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பிழைப்பு நின்றுவிடும் என்பதால்,  அவர்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வந்து விடக்கூடாது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடக் கூடாது என்பதில் சில தமிழ் அரசியல் தலைமைகள் கவனமாக இருக்கின்றனர்.

இந்த நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். உண்மையான சுதந்திரமும் நல்லாட்சியும் இன்று இந்த நாட்டில் இடம்பெறுகின்றது. இதை நாம் அனுபவிக்கின்றோம். தொடர்ந்து இதை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு 4500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று, எமது மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியொருவரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன் பிடி வாழ்வதாரம் இவை அனைத்தையும் மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த செயற்றிட்டங்களை உள்ளடக்கி இருபதுக்கு இருபது எனும் 2020 நோக்கிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .