2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'எமது கட்சி சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டுமென்பதற்காக முழுமையாக ஈடுபடுகின்ற தமது கட்சி பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு காரியாலயத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான ஆணையை மக்களிடமிருந்து நாம் மீண்டும் பெறுவதே எமது நோக்கமாகும்' என்றார்.  

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட  மாற்றம் காரணமாக எமது பிரச்சினைகளை செவிமடுக்கும் ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட்டு, அதன் நிலைத்திருப்பு தொடர்பில் தற்போது மீண்டும் ஒரு பலப்பரீட்சை நடைபெறுகின்றது. இந்நிலையில், எமது பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருவாரியான வெற்றியே  வருகின்ற அரசுடன் பேரம் பேசும் சக்தியாக எம்மை மாற்ற வல்லதாக அமையும்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .