2025 மே 14, புதன்கிழமை

முச்சக்கரவண்டி தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை மக்கலடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை  இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றைச்; சேர்ந்தவர்கள்  தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். வீட்டுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டியே இனந்தெரியாதோனினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .