2025 மே 15, வியாழக்கிழமை

தேர்தல் பிரசார கூட்டத்தில் கல் வீச்சு; ஆதரவாளர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் காயமடைந்த ஆதரவாளர் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து புதன்கிழமை (05) இரவு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அமீர் அலியின் வாகனத்தை இலக்குவைத்து அமீர் அலிக்கு எதிராக செயற்படுபவர்களினால் வீசப்பட்ட கல் வாகனத்துக்கு அருகிலிருந்த தனது  தலையில் பட்டு  காயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .