2025 மே 15, வியாழக்கிழமை

சிறிய ரக கென்டரொன்று குடை சாய்ந்துள்ளது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியின் சத்துருக்கொண்டானில் இன்று சனிக்கிழமை  (15) அதிகாலை சிறிய ரக கென்டரொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரழப்புக்கள் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார்,  கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி தெம்பிலி ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது குறித்த கென்டர் வீதியியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .