Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகியம்மன் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கார், சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது,
இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .