2025 மே 14, புதன்கிழமை

கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

பொழுதுபோக்காக கடலில் செலுத்தும் மோட்டார் தோணியை அனுபவமின்றி செலுத்திய இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு, வட்டவான் கடலில் ஞாயிற்;றுக்கிழமை (23) மாலை மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவானிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பணியாளராக கடமையாற்றிவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஜீவரெட்ணம் அஜித்குமார் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவரது சடலம் கடற்படையினர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .