R.Maheshwary / 2022 மார்ச் 28 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை ஓணான்கள் உள்ளிட்ட சிறிய பூச்சியினங்களை சேகரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மொரவக்க நீதவான் நீதிமன்ற நீதவான் அஜித் லியனகே உத்தரவிட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நேற்று (27) சந்தேகநபர்கள் இருவரும் மொரவக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது இந்த மாதம் 17ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருகைத் தந்த 52 மற்றும் 47 வயதுடைய இருவரும் சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை பூச்சியினங்களை சேகரித்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026