2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இ.தொ.கா உறுப்பினர்களுக்கு பதவி வேண்டும்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உப -தலைவர் மற்றும் சபை முதல்வர் ஆகிய பதவிகளில் ஒன்றை, மாகாண சபையில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் இ.தொ.கா.வுக்கு வழங்க வேண்டும் என சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர்களான கணபதி இராமச்சந்திரன் மற்றும் அண்ணாமலை பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர் சப்ரகமுவ மாகாண சபை, நாளை 8ஆம் திகதி கூடவுள்ள நிலையில், சபை உப-தலைவர் மற்றும் சபை முதல்வர் ஆகிய வெற்றிடங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சப்ரகமுவ மாகாண சபையின் உப-தலைவர் துஷ்மந்த மித்ரபால, வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிவிட்டார். மேலும், மாகாண சபையில் ஆளும் கட்சியில் இருந்த சபை முதல்வர் ஜயதிஸ்ஸ ரணவீர எதிர்க்கட்சிக்கு மாறியதால் அவர் வகித்து வந்த சபை முதல்வர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது.

எனவே, இவ்விரு பதவிகளில் ஒன்றை இ.தொ.கா உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் இ.தொ.கா பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில், கணபதி இராமச்சந்திரனும் இ.தொ.கா சார்பில் கேகாலை மாவட்டத்தில் அண்ணாமலை பாஸ்கரனும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .