Editorial / 2020 மே 19 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல-வெல்லவாய வீதியில், நேற்று (18) இரவு லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி மரணமடைந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையைச் சேர்ந்த ஒருவரே, விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையிலிருந்து கல்முனை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறி, இராவணா எல்ல பிரதேசத்தில் வைத்து வீதியைவிட்டு விலகிச் சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago