2025 ஜூன் 18, புதன்கிழமை

கசிப்பு புகட்டியதால் 8 வயது பிள்ளை வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலவந்தமாக கசிப்பை புகட்டியதால் 8 வயது பிள்ளையொன்று ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்தும்முல்ல- நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வசிப்பதுடன், தந்தை போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிள்ளையின் மாமா உறவு முறையான ஒருவரைக் கைதுசெய்வதற்காக  விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .