R.Maheshwary / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தர கோரி கண்டி நகர் எங்கும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இவ்வாறு கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
கண்டி சட்டத்தரணிகள் சங்கம், சிங்கள வர்த்தக முன்னணி, முஸ்லிம் வர்த்தக சங்கம், தமிழ் வர்த்தக சங்கம், மத்திய மாகாண வணிக மற்றும் தொழிற்சாலை சபை உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினம் கருப்பு கொடிகளுடன் ஜோர்ஜ். ஈ.டீ.சில்வா மைதானத்தில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026