Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உபட்ட கோணாடிக்க பிரதேச பகுதியில் கோழி பண்ணை ஒன்றில் சுமார் 54ஆயிரம் பெறுமதியான கோழி தீனி மூடைகள் மூன்றை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது,
கோழி பண்ணை உரிமையாளர் வெலம்பொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கோணாடிக்க பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் தீனி மூடைகளை கடுகண்ணாவ பகுதியில் உள்ள வியாபார நிலையத்துக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இரு சந்தேக நபர்களையும் கம்பளை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதற்க்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago