Sudharshini / 2016 ஜனவரி 24 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட், தலவாக்கலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (23), குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வுட் பீரடி தோட்டம், 8ஆம் பிரிவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டில் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தலவாக்கலை, தெவிசிரிபுர பகுதியில் 22 வயதான ஒருவர், காணியை சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .