2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணையொன்றை மீண்டும் முன்வைக்கவுள்ளதாக மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர், ரஞ்சித் அலுவிஹார  தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 57 பேரில் 33 பேரின் ஆதரவுடன் இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மே மாதம் மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவின் படி அது தடைப்பட்டது.

இம்முறை நீதியரசரின் ஆலோசனைக்கமைய இத் தீர்மானம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தனக்கு 36 உறுப்பினர்களது ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .