R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணியொருவர், சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவுக்கும் தொற்று உறுதியான சம்பவம் பதுளை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 29 வயதுடைய கர்ப்பிணியொருவர், சத்திரசிகிச்சை மூலம் சிசுவொன்றை பிரசவித்துள்ளார். எனினும் அச்சிசுவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தாய் மற்றும் சேயுக்கும் பதுளை பொது வைத்தியசாலை தரப்பினரால், மிகுந்த அவதானத்தின் மத்தியில் சிகிச்சையளிக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக தொற்றிலிருந்து மீட்டு, சுகதேகிகளாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .