2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நகரபிதா லலித் கடமையை ஏற்றார்

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

எம்பிலிபிட்டிய நகர சபையின் நகரபிதா  லலித் கமகே, நேற்று முன்தினம் (02) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

எம்பிலிபிட்டிய நகரசபையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயில் 8  உறுப்பினர்களும்  ஐக்கிய தேசியக் கட்சியில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 1 உறுப்பினரும் ஜே.வி.பியில் 1 உறுப்பினர் என மொத்தமாக 13 பேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஓமல்பே சோபித தேரர், சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, சப்ரகமுவ மாகாண சபை  முன்னாள் உறுப்பினர் திபால் குணசேகர மற்றும் எம்பிலிபிட்டிய நகர சபையின் உப நகரபிதா தினேஷ் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X