Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபேசிறி
மழையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காயச் செய்கையாளர்களுக்கு நட்டஈட்டுத் தொகையாக, 10 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, மாத்தளை மாவட்ட விவசாய சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பண்டார விஜேசேகர தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெரிய வெங்காயச் செய்கையாளர்களுக்கு, ஒரு ஹேக்கருக்கு 95,000 ரூபாய் என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
இதற்கமைவாக, தம்புள்ளை மற்றும் கலேவெல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 74 பேருக்கு, குறித்த நட்டஈட்டுத் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, பண்டார விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு, மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பீ.ஜே குமார முன்னிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மதிப்பிடப்பட்ட நட்டஈட்டுத் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
3 hours ago
7 hours ago