2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நானுஓயா சமர்செட் பகுதியில் மண் சரிவு

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா சமர்செட் லேங்டல் தோட்டத்தில் 28 லயன் குடியிருப்புக்களை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 26 குடும்பங்களைச்  சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் தற்காலிகமாக சமர்செட் கார்லிபேக் பாடசாலையில் தற்காலிகமாகதங்கியுள்ளனர் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் புவனேந்திரன் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் லயன் குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் வருகைத் தந்து இதனை அறிக்ககையிடவுள்ளதாக அப்பகுதி கிராம உத்தியோகத்தர் புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு தேவையான  உதவிகள் தோட்ட அதிகாரி கோசல விஜேசேகரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பி.கேதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X