2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

நாவுல நகரில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை மாவட்டத்தில், இன்று (20) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மாத்தளையிலுள்ள பிரதான நகரங்களில் மக்களின்  வரவு குறைவாகக் காணப்பட்டதாகவும் அத்துடன் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.

கடந்த வாரம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டபோது, சனநாடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் எனினும் இன்று(20)  குறைவாகவே காணப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் நாவுல போன்ற நகரங்களில், மரக்கறி விலை சடுதியாக குறைவடைந்திருந்தாகவும் மரக்கறி கொள்வனவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நடமாடும் வியாபாரத்தினூடாக, வீடுகளுக்கே மரக்கறிகள் கொண்டு விநியோகிக்கப்படுவதால், இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .