2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொல்கொல்லை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 13 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மலையகத்தில் நேற்று மதியம் முதல் பெயது வந்த கடும் மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால்,  பொல்கொல்ல  நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக நீர் தேக்கத்தின் இரு கதவுகள் தலா மூன்று அடி நான்கு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் விநாடிக்கு ( செக்கன்) 1700 கன அடி நீரை விக்டோரிய நீர் தேக்கத்திற்கு அனுப்புவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X