மு.இராமச்சந்திரன் / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில், போதை ஏற்படக்கூடிய வகையிலான பாணியை ( சிரப்) விற்பனை செய்த மருந்தகமொன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட பொலிஸ் அதிரடிபடையினரும் நுவரெலியா சுகாதாரப் பரிசோதகர்களும், மேற்படி மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அனுமதியின்றி மேற்படி பாணி விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (13) மாலை, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது
இந்நிலையில், குறித்த மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், மருந்தக உரிமையாளரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட உணவு ஔடத பரிசோதகர் சரத்விஜேதுங்க தெரிவித்தார்.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago